அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...
16-07-2011 ஞாயிற்று கிழமை சரியாக 08.50மணியளவில் திருவாருர் மாவட்ட தலைவர் P.அப்துர் ரஹ்மான்,மற்றும் பொது செயலாளர் M.I.இஷ்மத் பாட்ஷா முன்னிலையில் திருவாரூர் நகர கிளையில் பொதுக்குழு நடைப்பெற்றது.
இப்பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர்
- தலைவர் : அப்துல் காதர்
- செயலாளர் : A .கௌஸ் மைதீன்
- பொருளாளர் : மீரான்
- துணை தலைவர் : பஹ்ருதீன்
- துணை செயலாளர்கள் : ஷாகுல் ஹமீது
- சையது முகம்மது மிஸ்பாஹி
- மருத்துவர் அணி செயலாளர் : நியாசுதீன்
- தொண்டர் அணி செயலாளர் : அப்துல் ரஹ்மான்
தீர்மானம் :
1 திருவாரூர் நகரம் கடந்த முன்று வருடமாக பாதாள சாக்கடை திட்டத்தால் குண்டும் குழியுமாக இருந்து பல மனிதர்கள் அவதிகுள்ளாவதை முடிவுக்கு கொண்டு வர நகரம் முழுவதும் சரியான சாலைகள் அமைத்து தரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர் .
2 தமிழக அரசு கொண்டு வந்த நோன்புக்கஞ்சிக்கு அரிசி வழங்கும் திட்டத்தை முழுமையாக அனைத்து பள்ளிவாசல்களிலும் பாரபட்சமில்லாமல் வழங்கும்படி கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
3 திருவாரூர் நகரம் முழுவதும் சாக்கடை நீர் தேங்கிகிடப்பதை பற்றி நகராட்சிக்கு பல முறை மனு அளித்தும் சுத்தம் செய்யாமல் பல நோய்களுக்கு வழி வகுக்கும் நகராட்சியை கண்டிபத்துடன் உடனடியாக சுத்தம் செய்து நகரத்தை தூய்மை படுத்தும்படி இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுகொள்ளபடுகிறது.
இறுதியாக நகர செயலாளர் A .கௌஸ் மைதீன் அவர்கள் மேற்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியதுடன் நன்றியுரை நிகழ்த்தி நிறைவடைந்தது.