FLASH NEWS : coming soon ......... -

பாபர் மஸ்ஜித் - தீர்ப்பு குறித்த TNTJ யின் அதிரடி அறிவிப்பும் தமுமுக வின் அரசியல் சார்புத் தீர்ப்பும் பாருங்க...


மோடியின் சகோதரி ஜெயலலிதாவிடம் கூட்டணி வைத்த அம்மாவின் சகோதரன் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் அதிமுக வில் கூட்டணி வைத்தவுடன் தனது அரசியல் ஜால்ராவை துவக்கி காவிகளுக்கு அடங்கி அறிக்கை விட்டிருக்கிறார்.



பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நீதியை சாகடித்து ஆழ குழிதோண்டி புதைத்திருக்கிறது.

எந்த விதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பஞ்சாயத்து பாணியில் இத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. ஒரு இடம் யாருக்கு உரியது என்பதை முடிவு செய்ய அந்த இடத்திற்கான ஆவணத்தையும் அனுபோகத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள சிவில் சட்டமாகும்.

ஆவணத்தின்படியும்இ அனுபோக பாத்தியதையின் அந்த இடம் முஸ்லிம்களுக்கு உரியது என்பது உலகம் அறிந்த உண்மை. பள்ளிவாசல் 1949ல் சிலை வைத்ததும்இ 1992ல் பாபர் மசூதியை இடித்து தள்ளியதையும் உலகம் பார்த்துக் கொண்டிருந்ததால் இந்த தீர்ப்பை அறியும் உலக மக்கள் இந்தியாவில் அறவே நீதி இல்லை சிறுபான்மை மக்களுக்கு உரிமை இல்லை என்ற முடிவுக்கு வருவார்கள்.

நீதிமன்றத்தின் இச்செயலால் தேசத்தின் மானம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த முஸ்லிம்களும்இ நாட்டில் உள்ள நடுநிலைவாதிகள் அனைவரும் இத்தீர்ப்பை நிராகரிக்கிறார்கள் என்பதை அறிவிக்கிறோம்.

இது தொடர்பாக வரும் 17-10-2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர மாநில செயற்குழுவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.

இப்படிக்கு
ரஹ்மதுல்லாஹ்
மாநிலத் துணைத் தலைவர்

இவ்வாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம் சமுதாயத்தின் ஒட்டுமொத்த கொந்தளிப்பையும் பிரதி பலிப்பையும் அறிவித்துள்ளது.
Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved